எப்பேர்ப்பட்ட தலைவலியும் நொடியில் காணாமல் போக இந்த கஷாய டீயை குடிச்சி பாருங்க …!!

November 7, 2022 at 7:58 am
pc

காலை எழுந்தவுடன் நம்மில் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஏனென்றால், இந்த டீ நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நம்மில் பலரும் டென்ஷன், தலைவலி ஏற்படும் நேரத்தில் முதலில் தேடுவது டீயை தான். ஆனால், நாம் எப்போதும் குடிக்கும் டீ நம் உடலுக்கு நன்மையை தான் கொடுக்கிறது என்று சொல்ல முடியாது அல்லவா. அதற்கு பதிலாக மூலிகை டீயை அருந்தலாமே. இது தலைவலியை போக்குவதோடு மனஅழுத்தை போக்கி டென்ஷனையும் குறைக்கிறது. இந்த டீயை தயார் செய்ய நீங்க அதிக நேரம்கூட செலவுவிட தேவையில்லை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டென்று தயார் செய்துவிடலாம். சரி, அப்படி என்ன டீ அது? வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 1 இன்ச் அளவு

தண்ணீர் – 2 கப்

துளசி இலை – சிறிதளவு

பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 டீஸ்பூன்

புதினா இலை – 4

தேன் – தேவையான அளவு

கெமோமில் தேயிலை (Chamomile) பவுடர் – 1/2 டீஸ்பூன்

குறிப்பு: கெமோமில் தேயிலை பவுடர் என்பது உலர்ந்த கெமோமில் மலர்களால் செய்யப்படுகிறது. டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும். கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

செய்முறை:

முதலில் அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி அதில் இஞ்சியை நசுக்கி போட்டு கொதிக்க விடுங்கள். அதோடு, கொஞ்சமாக துளசி இலைகளையும் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிடுங்கள்.

பின்னர் அதை வடிகட்டி, அதோடு பெருஞ்சீரக, புதினா இலைகள், கெமோமில் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். அதன்பின், சுவைக்காக தேவையான அளவு தேன் சேர்த்து கலக்கி சூடாக பருகுங்கள். அவ்வளவு தான் உங்க தலைவலியை போக்கும் சூப்பரான டீ ரெடி.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website