எரிந்த நிலையில் ஆண் சடலம்: கொலையா…? தற்கொலையா..?

April 11, 2022 at 11:06 am
pc

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வசந்தி இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.  மூத்த மகன் அசோக் (வயது 32)  பல இடங்களில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

கடைசியாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இவருக்கும் ஆம்பூர் அடுத்த வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குழந்தைகள் இல்லை.
அசோக்  ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் எப்போதும் மூழ்கி இருப்பார் என்று கூறப்படுகின்றது.  
மேலும் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி உள்ளார்.  இதனால் மனைவி கோபித்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் அசோக் நேற்று மனைவியை அழைத்துவர அவர்கள் வீட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர்.  நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டின் மாடியில் தனியாக வசித்து வரும் அசோக்கிற்கு அவர்கள் பெற்றோர்கள் நேற்று இரவு உணவு கொடுத்து உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் அசோக்கின் வீட்டிற்கு பின்புறம் எரியும் வாடை வந்துள்ளது.  அக்கம்பக்கத்தினர் போய் பார்த்தபோது அசோக் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.  இடுப்புக்கு கீழே முழுவதும் எரிந்து கால்கள் எரிந்து துண்டாகி உள்ளன. 
இதுகுறித்து  அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு சம்பவம் இடத்துக்கு விரைந்துவந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். 
பின்னர், கருகிய நிலையில் இருந்த அசோக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அசோக் ஆன்லைன் ரம்மியில் பல ஆயிரம் இழதந்தாலும், மனைவி வாழாமல் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாலும் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து எரித்து விட்டார்கள் என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website