எலும்பை கிரைண்டரில் வைத்து அரைத்து பவுடராக்கிய கொலையாளி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
டெல்லியில் ஷ்ரத்தா வால்கர் கொலையில் திடுக்கிடும் திருப்பமாக புதிய தகவல் ஒன்று தெரிய வதுள்ளது. ஷ்ரத்தா வால்கரின் கொலை தொடர்பாக போலீஸ் தயாரித்துள்ள குற்றப்பத்திரிகையில், குற்றவாளியான அஃப்தாப், ஸ்ரத்தாவை சுத்தியலால் அடித்து கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஷ்ரத்தாவின் உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும், அவருடைய எலும்பை கிரைண்டரில் வைத்து அரைத்து பவுடராக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்துவிட்டு, ஜொமேட்டோவில் ஆர்டர் செய்து அஃபதாப் சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.