எல்லா வியாழக்கிழமையும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும் பணம் வந்து கொட்டும்
நம்முடைய கஷ்டங்களுக்கு தீர்வு தரப்போகும் அந்த மந்திரம் எது. குறிப்பிட்ட அந்த மந்திரத்தை எப்போது எந்த நேரத்தில் எப்படி உச்சரிப்பது தெரிந்து கொள்வோமா. வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விடுங்கள். வியாழக் கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பூஜை அறையில் கட்டாயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வாசனை நிறைந்த ஊதுவத்தியை ஏற்றி வைத்து விடுங்கள்.
அதன் பின்பு சிறிது ஜவ்வாது இந்த பூஜைக்கு அவசியமாக தேவைப்படும். ஜவ்வாது பொடி, ஜவ்வாது பேஸ்ட் எதுவாக இருந்தாலும் அதை வாங்கி உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் லேசாக தடவி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கைகள் வாசமாக இருக்கட்டும்.
நீங்கள் தரையில் விரிப்பில் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளலாம். முதலில் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கஷ்டத்தை போக்கும் சிவமந்திரம் உங்களுக்காக இதோ.
ஓம் நமோ நமசிவாய சர்வ குபேர வசி வசி வசி ஓம்.
மந்திரம் இவ்வளவு தாங்க. 27, 51,108 இப்படியாக ஒற்றைப்படையில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆனால் நெற்றியில்விபூதியோடு எம் பெருமானை மனதார வேண்டிக்கொண்டு கஷ்டங்கள் சுக்கு நூறாக சிதறி ஓட வேண்டும் என்று நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். ஒருசில வாரங்களிலேயே உங்களுடைய குடும்ப கஷ்டத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.