ஏழை குழந்தைகளுக்கு உணவை தூக்கி வீசினாரா மகாராணி? பரபரப்பு வீடியோ குறித்த உண்மை

September 11, 2022 at 3:37 pm
pc

பல வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஏழை குழந்தைகளுக்கு உணவை தூக்கி வீசியதாக கூறி ஒரு வீடியோ வைரலான நிலையில் அதில் இருப்பது மகாராணியே கிடையாது என தெரியவந்துள்ளது.

குறித்த வீடியோவில் இரண்டு பெண்கள் கும்பலாக நிற்கும் குழந்தைகளை நோக்கி உணவை வீசுவது போல காட்டப்படுகிறது. அதை பிடிக்க குழந்தைகள் சண்டையிடுவதும் வீடியோவில் தெரிகிறது.

இந்த பெண்களில் ஒருவர் ராணி இரண்டாம் எலிசபெத் என்றும், இந்த வீடியோ ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் காலனி ஒன்றில் படமாக்கப்பட்டது என்றும் கூறப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டது.

ஆனால் உண்மையில் அந்த வீடியோ இரண்டாம் எலிசபெத் பிறப்பதற்கு பிறப்பதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1900ஆம் ஆண்டு வியட்நாமில் இரண்டு பெண்கள் மக்களுக்கு நாணயங்களை வீசும் காட்சி தான் அது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணி 1926ல் தான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website