ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த அதிரடி முடிவு.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!
ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். ‘பம்பாய்’ ‘காதலன்’ ‘அலைபாயுதே’ உட்பட பல படங்களில் இசையமைத்து அவர், ஹாலிவுட் சென்று “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். இவர் சமீபத்தில் வெளியான கோப்ரா மற்றும் நைட் ஷேடோ பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அவர் மணிரதனம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இன்று படத்தில் இருந்து முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி இந்தப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்த பத்து நாட்களுக்கு ஒரு புதிய முயற்சியை எடுத்து இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.