ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்..

March 29, 2023 at 9:34 pm
pc

ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு

கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான் காரணமாக இருப்பார்கள் என்றும் போலீஸில் புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்பவர் தான் இதற்க்கு காரணம் என கைது செய்யப்பட்டார். மேலும் திருட்டை நான் தான் செய்தேன் என்று ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.

இதன்பின் ஈஸ்வரி வீட்டில் இருந்து 100 பவுன் நகைகளையும் 4 கிலோ வெள்ளியும், 30 கிராம் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஐஸ்வர்யா கூறியதை விட அதிகமான நகைகள் ஈஸ்வரி வீட்டில் இருந்ததால் சந்தேகம் எழுந்தது. 

இதுகுறித்து ஐஸ்வர்யா விடமும் விசாரணை நடத்தப்பட்டதாம். ஐஸ்வர்யா வீடு மட்டுமின்றி ரஜினிகாந்த், தனுஷ் வீட்டில் கூட ஈஸ்வரி வேலை செய்து வந்துள்ளாராம். இதனால் ரஜினி, தனுஷ் வீட்டிலிருந்து மீதமுள்ள நகைகளை திருடி இருப்பாரா ஈஸ்வரி என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் வெளிவந்த விஷயம்

இந்நிலையில், ஏன் ஐஸ்வர்யா வீட்டில் திருடினேன் என்பது குறித்து ஈஸ்வரி போலீஸிடம் கூறியுள்ளார். 

இதில் ‘நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாடு போல் உழைத்தேன். அவர் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பேன். அவருக்கு நல்ல வசதி இருந்தும், எனக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் மட்டுமே சம்பளம் தருவார்’.

‘அந்த காசு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குமா? அதனால் தான் திருட துவங்கினேன். முதலில் சின்ன சின்னதாக திருட ஆரம்பித்தேன். என்ன கண்டுபிடிக்கவில்லை. இதனால் நகைகளையும் திருடினேன்’. 

‘என்னை கண்டுபிடிக்காததால் மேலும் மேலும் அந்த திருட்டு தொடர்ந்தது. இரு அடுக்கு மாடி வீட்டையும் வாங்கினேன். இன்னும் கொஞ்ச நாட்கள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்திருந்தால் நான் இன்னமும் திருடியிருப்பேன்’ என ஈஸ்வரி கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website