ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அத்துமீறல்கள்…வீட்டில் இருந்த 7000 ஆபாச படங்கள்!! சிறார்களை சாக்குலேட் கொடுத்து ஏமாற்றுதல்..

August 14, 2022 at 5:37 pm
pc

இந்தியாவில் சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிர ஐஏஎஸ் அதிகாரி மாருதி ஹரி சாவந்த் நான்கு மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7,189 ஆபாச படங்கள் மற்றும் 443 குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆபாச வீடியோக்கள் சாவந்தின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம், தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. சாவந்திற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

நடந்தது என்ன?

8 முதல் 13 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகளை சாவந்த் சொக்லேட்டுகள் மற்றும் இனிப்புகள் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமிகளிடம் அத்துமீறியுள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website