ஒடிசா விபத்தை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!
ரெயில்வே சிக்னல் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனஅனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரெயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் டபுள் லாக்கிங் உள்ளிட்ட மற்ற உபகரணங்களை பரிசோதனை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. கோரமண்டல் ரெயில் விபத்தை தொடர்ந்து ரெயில்வே வாரியம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.