ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் தாவிய பேய் பகீர் காட்சி…
நபர் ஒருவரிடமிருந்து மற்றொருவர் மீது கண்ணிற்கு சரியாக புலப்படாத உருவம் ஒன்று கடந்து செல்லும் காட்சி பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் ஆவிகள், பிசாசுகள், ஏவல், பில்லி, சூனியம் என்று பல இருப்பதாக கூறிவரும் நிலையில், இதனை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இதற்கேற்ப பல காணொளிகள் இணையத்தில் உலா வருகின்றது. சினிமா காட்சிகளில் பெரும்பாலும் பேய், பிசாசு இவற்றினை காட்டுவதை பார்த்திருப்போம்.
இங்கு நிஜத்தில் உருவம் போன்ற காட்சி பீதியை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் வீதியில் நடந்து வரும் நிலையில், மற்றொருவர் இவருக்கு எதிரே நடந்து செல்கின்றார்.
இத்தருணத்தில் ஒருவர் உடம்பிலிருந்து மற்றொருவர் உடம்பிற்கு கருப்பு நிறத்தில் உருவம் ஒன்று மாறியுள்ளது. இதனை காணொளியிலும் கண்கூடாகவே காண முடியும். இதனைப் பார்த்த பின்பு உண்மையிலேயே இது ஆவியாக இருக்குமோ என்ற கேள்வி அதிகமாகவே எழுகின்றது.