ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பலி!

September 17, 2023 at 9:23 am
pc

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 5 பேர் பலியானது சோகத்தையை ஏற்படுத்தியது.

இடிந்து விழுந்த மேற்கூரை 

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் ஆனந்த் நகர் காலனியைச் சேர்ந்தவர் சதீஷ் சந்திரா (40). இவர் தனது மனைவி தேவி (35), மகன்கள் ஹர்ஷித் (13), அன்ஸ் (5) மற்றும் ஹர்ஷிதா (10) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். 

அதிகாலை 5 மணியளவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

ஆனால், இதுகுறித்து காலை 8 மணியளவில் தான் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

அனைவரும் உயிரிழப்பு 

தூய்மை பணியாளர்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய சதீஷ் சந்திரா குடும்பத்தினரை மீட்டனர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website