ஒரே நிமிடத்தில் தொண்டை கரகரப்பை நீக்கும் அற்புத பானம் …!!

தேவையானவை:
துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன்,
தூதுவளை – 10 இலை (அரிந்தது),
நாட்டுச்சர்க்கரை – 4 டீஸ்பூன்,
எலுமிச்சை – 1/2 மூடி.
செய்முறை:
இரண்டு டம்ளர் தண்ணீரில் துருவிய இஞ்சி, அரிந்த தூதுவளை, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு அதை எடுத்து வடிய விட்டு எலுமிச்சை பிழிந்து சூடாகவோ அல்லது ஜில் என்றோ பருகவும். இது தொண்டை கரகரப்பை நீக்கும்.