ஒரே வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் பலி! புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்

January 1, 2023 at 7:28 am
pc

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலியாகினர்.

புத்தாண்டு கொண்டாட்டம் 

உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், நட்சத்திர விடுதிகளில் நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடினர். 

இளைஞர்கள் பலர் இரு சக்கர வாகனத்தில் சுற்றி புத்தாண்டை வரவேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தில் நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகினர்.

ஒரே வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 

புத்தாண்டை கொண்டாட ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த லொறி மீது அவர்கள் சென்ற வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.     

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website