ஒரே வாரத்தில் சருமம் ஜொலிக்க வீட்டில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்..

April 9, 2024 at 5:03 am
pc

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.

ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க நம் வீட்டில் இருக்கும் வெந்தயம் ஒன்று போதும்.

வெந்தயம் பேஸ்பேக் 

வெந்தய பேஸ்பேக் தயார் செய்வதற்கு முதலில் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். 

பின்னர் இதனுடன் கற்றாழை ஜெல்லைச் சேர்த்தால் போதும். சருமத்தை அழகாக்க உதவும் வெந்தய பேஸ் பேக் ரெடி.

மேலும் வெந்தய பவுடருடன் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்தும் பேஸ்பேக் போடலாம்.

பயன்படுத்தும் முறை

இந்த வெந்தய பேஸ்பேக்கை கழுத்து மற்றும் முகத்தில் அப்ளை செய்து பின் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை ஸ்கரப் செய்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிலாம்.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தைப் பிரகாசமாக வைத்திருக்க உதவும்.

கிடைக்கும் பயன்கள் 

இந்த பேஸ்பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர கழுத்து, முதுகுப் பகுதிகளில் இருக்கும் கருமைகளை நீக்குகின்றன.

முகத்தில் உள்ள தழும்புகளை அகற்ற வேண்டும் என்றாலும், இந்த வெந்தய பேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.

வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மை, முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், பாக்டீரியா தொற்றுகள் போன்றவற்றைக் குணப்படுத்த உதவியாக உள்ளது. 

மேலும், முகத்தில் உள்ள பருக்களைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website