ஓடும்போதே உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்!
மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதையடுத்து மின்சார வாகன உற்பத்தியாளர்கள் கூட்டத்தை கூட்டி பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
தீ மட்டுமின்றி தற்போது மின்சார ஸ்கூட்டர்களின் குறைபாடுகளையும், தயாரிப்பின் தரம் குறைந்ததையும் நுகர்வோர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் முன்னணி நிறுவனமான ஓலா மீது பரவலான புகார்கள் குவிந்துள்ளன.
ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டர் உடைந்து விழுந்தாக உமாதா என்பவர் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார். ஸ்ரீநாத் மேனன் படத்தை ட்வீட் செய்துள்ளார். குறைந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோதே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. முன் போர்க் உடைந்து வாகனம் கழன்று விழுந்தது.
ஸ்கூட்டரின் அந்த பகுதியை மாற்றியமைக்க வேண்டும். தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு முன்பக்க உடைந்த ஸ்கூட்டர் படத்துடன் ஸ்ரீநாத் மேனன் ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட்டை ஓலா மற்றும் சிஇஓ பவிஷ் அகர்வால் டேக் செய்துள்ளனர். பலர் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டு பதிலளித்தனர். முன்பக்க போர்க் உடைந்ததாக பலர் புகார் தெரிவித்தனர். சிலர் படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டபோது, ஓலா நிறுவனம் பதில் அளித்துள்ளது. ‘உங்களை விரைவில் தொடர்புகொள்வோம். நீங்கள் கூறியதை நாங்கள் பரிசீலிப்போம். இவ்வாறு கூறியுள்ளது.