ஓடும் காரில் தாய், மகள் கூட்டு பாலியல் பலாத்காரம்!! அதிர்ச்சி தகவல்..

ஓடும் காரில் பெண் மற்றும் அவரின் 6 வயது மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பிரையன் கலியர் பகுதியை சேர்ந்த பெண் நேற்று இரவு தன் 6 வயது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது சோனு என்ற நபர் தனது காரில் லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளார். இதைநம்பி அப்பெண் தன் மகளுடன் அந்த காரில் ஏறியுள்ளார். காரில் ஏற்கனவே சோனுவின் நண்பர்கள் இருந்துள்ளனர். அப்போது, ஓடும் காரில் அந்த பெண்ணையும் அவரின் 6 வயது மகளையும் காரில் இருந்தவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் ஓடும் காரில் இருந்து அந்த பெண்ணையும், அவரது மகளையும் ஆற்றங்கரை அருகே தள்ளிவிட்டுவிட்டு தப்பினர். பாதிக்கப்பட்ட தாயும், மகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.