ஓரினச்சேர்க்கை: ரூ.75,000 பணம் பறிப்பு!

April 20, 2023 at 12:09 pm
pc

மணப்பாறை புத்தாநத்ததை சேர்ந்த முருகேசன் மகன் தியாகராஜன். சம்பவத்தன்று மணப்பாறையை சேர்ந்த அறிவழகன், முகமது ரியாஸ், அருண்குமார், யுவராஜ், லியோ பிளாய்டு, செந்தில்குமார் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து, தியாகராஜனை மது போதையில் மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்துள்ளனர். பின்னர் அதனை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்து தியாகராஜனிடம் இருந்து ரூ.75,000 பணத்தை கூகுள் பே மூலம் அபகரித்துள்ளனர். பணத்தை 6 பேரும் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website