கடிதம் பொய்… நள்ளிரவில் நடந்த போதை பார்ட்டி… கனியாமூர் மாணவி இறப்பில் பகீர்..!

July 28, 2022 at 3:49 pm
pc

கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு காதல் விவகாரம் காரணமில்லை எனவும் பள்ளியில் நடந்த போதை பார்ட்டி மீது சந்தேகம் இருப்பதாகவும் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் பகிர் குற்றசாட்டு வைத்துள்ளனர்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கஸ்டடி எடுத்து நேற்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், மாணவி எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை எனவும் சம்பவத்தன்று விடுதியில் நடந்த பார்ட்டியில் மாணவிக்கு போதை மருந்தை கலந்துகொடுத்திருக்கலாம் எனவும் மாணவியின் பெற்றோர் பகிர் குற்றசாட்டை வைத்துள்ளனர்.

வதந்திகளுக்கு பெற்றோர் விளக்கம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில் மாணவியின் பெற்றோர் புலனாய்வு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்களது மகள் சக்தி பள்ளிக்கு சென்று வரும் தொலைவு அதிகம்… சில நாட்கள் பள்ளி பேருந்து வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே மகளை இறக்கி விட்டு சென்று விடும். காலையிலும் வீட்டருகே பேருந்து வந்து நிற்காது. அந்த சூழலில் நான்தான் மகளை அழைத்து வரும் வேண்டும். இந்த சிரமத்தினால்தான் மகளை வீட்டருகே உள்ள சாய் சக்தி என்ற பள்ளியில் சேர்த்தோம். ஆனால், என்னிடம் சமரசம் பேசிய சக்தி பள்ளி நிர்வாகம், சாய் சக்தி பள்ளியில் கட்டிய பீஸின் ரசீதை கொண்டு வந்தால் அந்த பணத்தை கழித்திவிட்டு மீதமுள்ள பீஸை மட்டும் 

கட்டுங்கள் மீண்டும் உங்கள் மகளை இங்கேயே சேர்த்து விடுங்கள் என சமாதானம் பேசினர். மேலும், எனது மகளும் சக்தி பள்ளியில் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் சக்தி பள்ளியில் மீண்டும் சேர்த்து விட்டோம். இதில் எந்த காதல் விவகாரமும் காரணமில்லை.

காதலா?

எனது மகள் காதலித்தார் என்ற தகவல்கூட எங்கள் கவனத்துக்கு வரவில்லை. அவள் யாரையும் காதலிக்கவில்லை. ஒருவேளை காதலித்திருந்தாலும் மகள் மரணத்துக்கு அது காரணமில்லை. பள்ளி நிர்வாகம் எதையோ பேசி உண்மையை மறைக்க பார்க்கிறது. ஜூலை 12 ஆம் தேதி இரவே எனது மகள் இறந்துள்ளார்… ஆனால், பள்ளி நிர்வாகம் எங்களிடம் தகவல் கூறாமல் அன்று இரவு முழுக்க யார் யாரிடமோ போன் செய்து இதில் இருந்து தப்பிக்க வழி தேடியுள்ளனர். மறுநாள் காலையில்தான் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கு சென்று பார்த்தபோது, மகள் விழுந்து இறந்ததாக கூறப்படும் இடத்தில் ஒரு சொட்டு ரத்தமும் இல்லை.. ஆனால், கீழ் தளத்தில் உள்ள சுவற்றில் கைவிரல் படிந்த ரத்தக்கறை அப்படியே இருந்தது. மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, மகளை அடையாளம் காணாத பிணம் போல பிணவறையில் போட்டிருந்தனர். அவளது கை விரல்கள் இறுக்கமாக மூடப்பட்டிருந்தது. பின்னந்தலையில் ரத்தம் மின்னிக்கொண்டிருந்தது. கை முட்டியில் சீராய்வுகள் இருந்தன… மார்பு பகுதியில் காயங்கள் இருந்தன. படக்கூடாத இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

போலீஸ் உடந்தை?

மகள் கழுத்தில் ஒரு சவரன் தங்க செயினும், காதில் கால் பவுன் கம்மலும் போட்டிருந்தாள்… இரண்டும் காணவில்லை… இதுவரை எங்களிடம் அவற்றை ஒப்படைக்கவில்லை… சம்பவத்தன்று விடுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை இதுவரை எங்களிடம் காட்டவில்லை… மகள் உண்மையில் தற்கொலை செய்திருந்தால் எதற்காக சம்பவம் நடந்த அன்றே தகவல் சொல்லவில்லை… சிசிடிவி ஆதாரங்களை காட்டாமல் இருப்பது ஏன்? எங்களிடம் தகவல் சொல்ல பள்ளி நிர்வாகம் முற்பட்டபோது போலீஸ் அவர்களை தடுத்ததாக கூறுகின்றனர். போலீஸ் ஏன் தடுக்க வேண்டும்?

கொலை தான்

பெற்றோர், உறவினர்கள் இருந்தும் அனாதை பிணம் போல பிணவறையில் ஏன் போட்டிருக்க வேண்டும்? மேலும், எனது மகள் நன்றாக தமிழ் பேச, எழுதக்கூடியவள். தற்கொலை கடிதத்தில் தங்கலிஷில் எழுதப்பட்டுள்ளது. அதுவும் சிகப்பு பேனாவில்… நான் ஒரு நாளும் எனது மகளுக்கு சிகப்பு பேனா வாங்கி கொடுத்ததே இல்லை… கடிதத்தில், சாரி அம்மா, சாரி அப்பா என்று எழுதிவிட்டு தம்பியை மட்டும் சாரி சந்தோஷ் என்று எழுதப்பட்டுள்ளது. எனது மகனின் பெயர் சந்தோஷ் என்று பள்ளி நிர்வாகத்துக்கு நன்றாக தெரியும். இதுவே எங்களுக்கு சந்தேகத்தை ஆழமாக கிளப்புகிறது என்று கூறிய மாணவியின் தந்தை, பள்ளியில் பார்ட்டி நடந்துள்ளதாம்… பள்ளி செயலாளரின் தம்பி அந்த பார்ட்டியின் போது மாணவிகளுக்கு 

போதை மருந்தை கொடுத்துள்ளதாகவும் அதை உட்கொண்ட எனது மகள் நிலைதடுமாறிக்கூட மாடியில் இருந்து விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இது தற்கொலை இல்ல கொலை. சிபிசிஐடி விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என நம்புகிறோம் தயவு செய்து இதில் காதல் விவகாரத்தை கூறி வதந்தி பரப்ப வேண்டாம் என மாணவியின் பெற்றோர் கண்ணீர்மல்க கோரிக்கையை வைத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website