கணவனை அடிப்பது போல் நினைத்து… 6 வயது மகளை அடித்தே கொன்ற தாய்!

August 11, 2022 at 4:42 pm
pc

தண்டராம்பட்டு அருகே, ஆறு வயது மகளை அடித்துக் கொலை செய்த தாயை, போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அரடாப்பட்டையைச் சேர்ந்தவர் பூபாலன், 37; இவரது மனைவி சுகன்யா, 28; இவர்களது மகள் ரித்திகா, 6. இவர், பார்க்க தந்தை பூபாலனை போலவே இருப்பார்.

பூபாலனுக்கும், சுகன்யாவிற்கும், அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். எப்போதெல்லாம் தம்பதிக்குள் தகராறு நடக்கிறதோ, அப்போதெல்லாம் தன் கணவனை அடிப்பது போல் நினைத்து, மகள் ரித்திகாவை, சுகன்யா அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டபோது, ரித்திகாவை, சுகன்யா தாக்கினார். இதில், மயக்கமடைந்த ரித்திகாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். வெறையூர் போலீசில் பூபாலன் அளித்த புகாரில் வழக்குப்பதிந்த போலீசார், கொடூர தாய் சுகன்யாவை கைது செய்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website