கணவனை இழந்த பெண்ணுடன் காதல்! வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களிலே இளைஞனுக்கு நேர்ந்த கதி.

January 8, 2021 at 12:41 am
pc

கணவனை இழந்த பெண்ணுடன் காதல்! வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: இளைஞனுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இளைஞனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆன செய்தி அறிந்து கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பணியாற்றி வந்த போது, அங்கு நஜுரா பானு என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவனை இழந்த நஜூரா பானுவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் ஆகியதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் ரியாஸ் அகமதுவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரியாஸ் அகமது சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த தகவலை எப்படியோ அறிந்த நஜுரா பானு, கடும் ஆத்திரத்தில் ரியாஸ் அகமதுவை தொடர்பு கொண்டு உன்னை தீர்த்து கட்டுவிடுகிறேன் பார் என்று மிரட்டியுள்ளார்.

இதனால், திருமணம் முடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த ரியாஸ் அகமது, சில வாரங்களுக்கு பின் தெருவில் இருக்கும் டீ கடை ஒன்றிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மட்டுடன் இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், ரியாஸ் அகமது வந்தவுடன், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்மூடித்தனமான வெட்டினர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரியாஸ் அலறி துடிக்க, இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரைக் கண்டு கொலையாளிகள் இரு சக்கர வாகனத்தில் அரிவாளை காட்டி மிரட்டியபடியே ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தப்பிச் சென்ற நபர்களையும், சென்னையில் இருக்கும் நஜூரா பானுவைத் தேடி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website