கணவரா? கோபப்பட்ட சமந்தா… நாக சைதன்யா ரியாக்ஷனே வேற!

August 15, 2022 at 11:57 am
pc

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். பாலிவுட்டில் முதல் முறையாக அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ள சமந்தா மும்பை ஹைத்ராபாத் சென்னை என பறந்து கொண்டிருக்கிறார்.

காபி வித் கரண்

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு விவாகரத்து அறிவித்தனர். அதன்பிறகு இருவர் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. நாக சைதன்யாவும் தெலுங்கு, தமிழ், இந்தி என பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா கரண் ஜோஹருடன் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கணவரா?

அப்போது கரண் ஜோஹர், நாக சைதன்யாவை கணவர் என்று ஆரம்பிக்க கணவரா என்று கோபப்பட்டார் சமந்தா. இதையடுத்து மன்னிப்பு கேட்ட கரண், முன்னாள் கணவர் என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் நடிகர் நாக சைதன்யாவும் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நாக சைதன்யா

அப்போது அவரிடம் உங்களுக்கு ஸ்க்ரீனில் ஏற்ற ஜோடி என்றால் யாரை கூறுவீர்கள் என கேட்க சமந்தா மற்றும் சாய் பல்லவி என கூறியுள்ளார். நாக சைதன்யாவின் இந்த ரியாக்ஷனை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் சமந்தா குறித்து இனி பேச எதுவும் இல்லை என்றும் நல்லதொரு காதலுக்காக ஏங்கி கொண்டிருப்பதாகவும் நாக சைதன்யா கூறியது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website