கணவர் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது – நீதிமன்றம்
இல்லத்தரசிகள் பணியை கணவரது 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து வாங்கிய சொத்துகளில் தனது மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, குழந்தைகளை கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் வேலை செய்கின்றனர். கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.