கணவர் வீட்டாருடன் சண்டை-6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்! அதிர்ச்சி சம்பவம்….

May 31, 2022 at 12:36 pm
pc

இந்தியாவில் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தாய் ஒருவர் தன்னுடைய 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம்.

இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார்.

குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற அதிகாரிகள், குழந்தைகளை மீட்ட போதும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்ப தகராறின் காரணமாக விரக்தியில் குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website