கண்ணீரில் சமந்தா!!குவியும் வாழ்த்து…யசோதா வெற்றி
ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்த யசோதா படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்த அனைவரும் சமந்தாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள்.
இந்த படம் சூப்பர் ஹிட்டாவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள். படத்தை தன் தோளில் தாங்கியிருக்கிறார் சமந்தா என்கிறார்கள் ரசிகர்கள். அமெரிக்காவிலும் யசோதாவை கொண்டாடுகிறார்கள்.
யசோதா படத்தில் நடித்தபோதே மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடினார் சமந்தா. ஆனால் அதை யாருக்கும் சொல்லாமல் கஷ்டப்பட்டு நடித்துவிட்டார்.
மயோசிடிஸ் பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா சமூக வலைதளங்களில் தெரிவித்தபோது தான் யசோதா படக்குழுவுக்கும் அது பற்றி தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தது.
இந்நிலையில் அவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு தான் நடித்த படம் வெற்றி பெற்றுள்ளதை பார்த்த சமந்தா ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
பட ரிலீஸுக்கு முன்பாக தான் டென்ஷனில் இருப்பதாக போஸ்ட் போட்டார். தற்போது டென்ஷன் போய் சந்தோஷத்தில் இருக்கிறார் சமந்தா.
அவரின் இந்த வெற்றியை தங்களின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். உங்களின் அன்புக்கெல்லாம் என்ன செய்யப் போகிறேனோ என்று சமந்தா நெகிழ்ந்திருக்கிறார்.
ஹரி மற்றும் ஹரிஷ் தன்னிடம் கதை சொன்னபோதே இது கண்டிப்பாக தியேட்டரில் ரிலீஸாக வேண்டிய படம் என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா. அவர் சொன்னது தான் சரி என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.