கண் வலி முதல் மூலநோய் வரை குணப்படுத்தும் ரணகள்ளி மூலிகை பயன்படுத்துவது எப்படி …?

January 7, 2023 at 4:37 am
pc

வீட்டில் மூலிகை வளர்க்க விரும்பினால் இந்த ரணகள்ளி தாவரத்தை வளர்ப்பது அவசியம் என்று சொல்லலாம். இந்த மூலிகை செடியை விலங்கினங்கள் சாப்பிடாது. ஆனால் இது அத்தனை மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இதன் நன்மைகளாக ஆயுர்வேதத்தில் என்னவெலாம் சொல்லப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
ரணகள்ளி இலை பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது. இந்த இலை அமிலத்தன்மையுடனும் உவர்ப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். ரணகள்ளி செடியின் இலை, வேர், தண்டு பகுதி என்று எதை நட்டாலும் செடி வளரும் என்பதோடு இதை வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.

ரணகள்ளி என்னும் தாவரம் மிகச்சிறியது. இது அலங்கார நோக்கத்துக்காக அழகுக்காக பல வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது. வெப்பம் நிறைந்த பகுதியில் இவை காணப்படும். பெரும்பாலும் அலங்கார தாவரமாக பயன்படுத்தப்பட்டாலும் இது முக்கிய மூலிகைகளில் ஒன்றாகவே உள்ளது. ஆயுர்வேதத்தில் இது எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

கண் வலி :

புதிய இலைகளை மசித்து சாறெடுத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கண் வலி நீங்கும். இது கண்களின் வெள்ளைப்பகுதியில் உள்ள வலியை குணப்படுத்த செய்யும்.

மலச்சிக்கல் :

ரணகள்ளி இலைகளை உலரவைத்து அதிலிருந்து தேநீர் தயாரித்து குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வயிற்றுப்போக்கு :

இந்த ரணகள்ளி இலைகளில் இருந்து சாறு எடுத்து அதில் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

காயங்கள் :

காயங்கள் உண்டாகும் போது இந்த ரணகள்ளி இலைகளை எடுத்து சிறிது சூடாக்கி இலைகளை நசுக்கி காயத்தின் மீது வைத்து கட்டி வந்தால் காயம் வேகமாக குணமாகும்.
நொறுக்கப்பட்ட இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் தோல் புண்கள் குணமாகும். நிவாரணம் கிடைக்கும். ரணம் ஆறும்.

காய்ச்சல் :

ரணகள்ளி சாற்றை குடித்து வந்தால் காய்ச்சல் தணியும். இந்த இலைகளில் உள்ள ஆண்டிபிரைடிக் பண்பு காய்ச்சலின் அறிகுறிகளை போக்க உதவும்.

வெள்ளைப்படுதல் :

வெள்ளைப்படுதல் இருந்தால் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இலையின் கஷாயத்தை குடித்து வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

சரும வீக்கம் குறைக்கிறது :

ரணகள்ளி இலைகள் மசித்து செய்யப்படும் வீக்கத்தை சருமத்தின் மீது தடவி வந்தால் வீக்கம் குறையும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு கணிசமாக வீக்கத்தை குறைக்கும்.

மூலநோய் :

ரணகள்ளி இலைகளில் இருந்து பெறப்படும் சாற்றை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்வது பலன் அளிக்கும்.

இரத்தக்கசிவு :

உடலில் இரத்தக்கசிவு இருந்தால் இதன் இலைகளை அரைத்து உள்ளங்கால்களில் தடவி வந்தால் இரத்தக்கசிவு நிற்கும்.

கல்லீரல் :

மஞ்சள் காமாலை போன்ற நோய்களை இந்த ரணகள்ளி சாறு குணப்படுத்தும். இது கல்லீரலின் செயல்பாட்டையும் அதிகரிக்கும்.

சிறுநீரகம் :

வழக்கமாக ரணகள்ளி சாறு குடித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் குணப்படுத்தலாம்.

காதுவலி :

சில துளிகள் ரணகள்ளி சாறை காதில் விட்டால் காதுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு :

ரணகள்ளி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாற்றை தினமும் குடித்து வந்தால் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்து வந்தால் சர்க்கரை அளவு குறைவதை கவனிக்கலாம்.

முகப்பரு :

ரணகள்ளி சாற்றை முகப்பரு கொதிப்புகளின் மீது தடவி வந்தால் சருமத்தின் சிவத்தல் மற்றும் வீக்கத்துக்கு உதவும்.

சளி மற்றும் இருமல் :

ரணகள்ளி இலைகளின் சாற்றை இனிப்பு கலந்து எடுத்து வந்தால் சளி இருமல் கட்டுப்படும். ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இது உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

ரணகள்ளி உலர்ந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது ஃப்ரி ரேடிக்கல்களை சிறப்பாக எதிர்த்து போராட உதவும்.

வயிற்று வலி :

இந்த ரணகள்ளி இலையில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயத்தை எடுத்துகொள்வது வயிற்று வலியை போக்க உதவும். மேலும் வலிக்கு நிவாரணியாக இருக்கும்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website