கதறும் குழந்தைகள் – பெற்ற 3 குழந்தைகளை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்!

October 30, 2022 at 11:11 am
pc

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹுகனியா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீர் அகமது. இவரது மனைவி தபசம்(26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வியாபாரியான முனீர் அகமது அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில் தபசமுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அப்ரார்(24) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதுபற்றி அறிந்த முனீர், இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தபசம், தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளை உதறிவிட்டு கடந்த 17 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி தனது கள்ளக்காதலனுடன் ஊரை விட்டு தப்பியோடினார்.

இதுகுறித்து முனீர் அகமது காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், இருவரையும் போலீசார் மீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தபசு கணவர், குழந்தைகளை உதறிவிட்டு தனது கள்ளக்காதலனுடன் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website