கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன் – நடிகர் விஜய்

December 7, 2023 at 8:43 am
pc

மீட்புப் பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உதவிகளை செய்யுமாறு, நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

மீட்புப்பணிகள்

மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெருமளவில் தண்ணீரால் சூழ்ந்துள்ளன.

பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆங்காங்கே மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல் சீரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நடிகர் விஜய் வேண்டுகோள்

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மக்களுக்கு உதவிட, மீட்புப் பணிகளில் மக்கள் நிர்வாகத்தினர் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

அவரது பதிவில், ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ”மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில், மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில், தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம்’ என தெரிவித்துள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website