கனவில் பாம்புகள் வந்தால் இத்தனை அர்த்தங்களா?
கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால் இந்த கனவுகள் பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்பிராயங்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கும். அதிலும் இந்தக் கனவுக் கண்டால் இப்படி நல்லது நடக்கும் இந்த கனவுகள் கண்டால் தீமைகள் வந்து சேரும் என பல கதைகள் எம்மிடம் தோன்றுவதுண்டு.
அந்தவகையில் பாம்புகளை கனவில் வருவதற்கான காரணம் அவ்வாறு வந்தால் என்னெ்ன பலன்கள் என்று பலருக்கும் பல விதமா கேள்விகள் இருக்கும். உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இதோ,
பாம்புகள் கனவில் வந்தால்,
உங்கள் கனவில் பாம்பு வந்தால் அது உங்களுக்கு எச்சரிக்கையை கொடுக்குமாம்.
உங்களுக்கு ஏற்படும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்துக் கொள்வதற்கும் பாம்புகள் உங்கள் கனவில் வரும்.
பாம்பு படம் எடுப்பது போல கனவு வந்தால் பொருளாதாரம் பாதிக்கும்.
கனவில் பாம்பு உங்களை கடித்து விட்டால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும்.
பாம்பு உங்களை விரட்டிக் கொண்டு வந்தால் வறுமையை சந்திக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
கனவில் பாம்பு உங்கள் காலைச் சுற்றிக் கொள்வது போல வந்தால் சனி பகவான் உங்களைப் பிடிக்கப் போகிறார் என்று அர்த்தம்.
உங்கள் வீட்டிற்குள் பாம்பு வந்து எதுவும் செய்யாமல் சென்றால் நீங்கள் வைத்திருக்கும் நேர்த்திக் கடனை உடனே செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.
யார் மேலாவது பாம்பு ஏறிச் செல்வது போல கனவு வந்தால் பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
நீங்கள் கனவில் பாம்பை அடித்துக் கொள்வது போல வந்தால் உங்கள் வாழ்க்கையில் வந்த ஆபத்து விலகி சென்றதாக அர்த்தம்.
கனவில் பாம்பு கனவில் படம் எடுத்து தலைக்கு மேல் குடைப் பிடிப்பது போல நின்றால் உங்கள் கடவுளின் அனுக்கிரஹம் முழுவதாக இருக்கிறது என்று அர்த்தம்.