கன்னியாஸ்திரிகள் வசிக்கும் கான்வென்ட்டில் நுழைந்து, 4 சிறுமிகளை மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்த கொடூரம்!

நான்கு சிறுமிகளை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாஸ்திரிகள் வசிக்கும், கான்வென்ட் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, நான்கு சிறுமிகளை மது குடிக்க வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் புதன்கிழமை இரவு திருவனந்தபுரம் அடுத்த கடினம்குளத்தில் உள்ள கான்வென்ட் ஒன்றில் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஒரு பெண் காவல்துறை அதிகாரி அந்த நிறுவனத்திற்குச் சென்று மைனர் சிறுமிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்தார். மேலும் அவர்கள் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 460 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் பலர் இதில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலில் உள்ள குற்றவாளிகள் சிறுமிகளை பலாத்காரம் செய்ய வேறு சிலரிடமிருந்து ஆதரவு பெற்றதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.