கன மழை எச்சரிக்கை!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்கபோகும் மழை !

September 3, 2023 at 9:12 pm
pc

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், சென்னை உட்பட பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது

இந்த நிலையில், தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, குமரி, தென்காசி, நெல்லை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலுர், ராணிப்பேடை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website