கரிசலாங்கண்ணியின் மருத்துவ குணங்களும் பயன்களும் …!!
கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
பயன்கள்:
கல்லீரல், மண்ணீரரை பலப்படுத்துவதுடன் செயல்பாட்டினையும் ஒழுங்குப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோயை குணமாக்குகிறது. மதுப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பினை குணப்படுத்துகிறது. அதிக காய்ச்சலினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, மண்ணீரல் வீக்கத்தினையும் சரி செய்கிறது
இரத்தசோகை:
கரிசாலையில் அதிகமான இரும்புச்சத்து உள்ளதால் இரத்தத்தினை சுத்தப்படுத்தி செயல்பாட்டினை சீர்படுத்துகிறது அனிமியா என்று இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
வயிறு:
குடல் புண், பித்தப்பை கற்கள், குடல் புழுக்கள், பித்தப்பை வீக்கம், மலச்சிக்கல் , வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் கரிசலாங்கண்ணியால் குணமாகும்.
சளிஇருமல்:
சளி இருமல் உள்ளவர்களுக்கு கரிசாலையை உண்ணக்கொடுப்பதன் மூலம் ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவை குணமடைகிறது. அதிக காய்ச்சல் உள்ளவர்களுக்கு கரிசாலை சாற்றைக்கொடுத்தால் காய்ச்சல் குணமாகும், நோய் எதிர்ப்புத்திறனும் கிடைக்கும். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் உடலில் உள்ள தாதுக்கள் பலப்படுத்துவதற்கும் கரிசாலங்கண்ணி உதவும்
கண்:
கண் பார்வை தெளிவாகவும், கண்ணொளி பெருகவும் உதவும்.
தலைமுடி:
தலையில் முடிகொட்டுவது, சொட்டையாவது போன்றவற்றை தடுக்கும், இள நரை வராமல் தடுக்கும்.
தோல்:
கரிசாலை சாற்றை இதர மூலிகைகளுடன் மேற்பூச்சாக பயன்படுத்தினால் தோல் நோய்கள், அறிப்பு, தோல் வெடிப்பு நீங்கும்.