கருப்பு பணம் பதுக்குறவன், ரெய்டுக்கு பயந்தவன், விருதுக்கு அலையறவன்: ரஜினியை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்…

August 19, 2022 at 2:44 pm
pc

75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்று கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ரஜினி. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு நம்ம ஆண்டு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு. நம்ம நாட்டை வணங்கும் விதமாக, நம் ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திர அடைவதற்கு எத்தனையோ வருஷங்கள் பல லட்சம் பேர் எவ்வளவோ சித்ரவதைகள், கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள் என்றார்.

கொடி

ரஜினி மேலும் கூறியதாவது, எத்தனையோ பேர் அவர்களின் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் 15ம் தேதி சாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்கிற உணர்வோடு ஒரு இரண்டு அடி இல்லை மூன்று அடி கொம்பில் நம் தேசியக் கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால் நம் வீட்டிற்கு முன்பாக அந்த கொடியை பறக்கவிட்டு நாம் பெருமைப்படுவோம். நாடு இல்லைனு சொன்னால் நாம் இல்லை. நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் என்றார்.

யார் பெயரையும் குறிப்பிடாமல் இயக்குநரும், விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மூன்று வர்ணங்கள்:

1. கருப்பு பணம் பதுக்குறவன்

2. ரெய்டுக்கு பயந்தவன்.

3. விருதுக்கு அலையறவன் என தெரிவித்துள்ளார்.

விமர்சனம்

நம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றச் சொன்ன ரஜினியை தான் மாறன் இப்படி விளாசியுள்ளார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். தொடர்ந்து தலைவரை சீண்டுவது சரியில்லை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மாறனை பாராட்டியும் சிலர் கமெண்ட் போட்டுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website