கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் சாப்பிட தகுந்த உணவும் தவிர்க்க வேண்டிய உணவும் …!!
தாய், சேய் என இரண்டு உயிர்களும் வெவ்வேறாக இருந்தாலும் தாயின் ஆரோக்கியமின்மை குழந்தையை எளிதில் பாதித்துவிடும். அந்தவகையில், 25 கர்ப்பிணிகளில் 1 கர்ப்பிணிக்கு கர்ப்பக்கால சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முடியும்.
எனவே, கர்ப்பிணிகள் கர்ப்பக்கால சர்க்கரை நோயில் இருந்து விடுபட இந்த உணவு முறைகளை கையாளுவது மிகச் சிறந்த பலனை அளிக்கும்.
கர்ப்பக்காலத்தில் சாப்பிட வேண்டியவை:
- சிவப்பு அரிசி
- சம்பா ரவை
- மட்டை அவல்
- கேழ்வரகு
- கம்பு
- ஓட்ஸ்
- நிலக்கடலை
- காராமணி
- வெண்டைக்காய்
- வாழைப்பூ
- சுரைக்காய்
- அவரைக்காய்
- கீரைகள்
- சின்ன வெங்காயம்
- பூசணிக்காய்
- முட்டைக்கோஸ்
- முருங்கைக்காய்
- பிஞ்சு கத்திரிக்காய்
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கர்ப்பமான பெண்கள் கர்ப்பம் தரித்ததிலிருந்து மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குறிப்பாக முதல் மாதத்தில் இருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மீது மிகவும் கவனம் தேவை. அப்படி கர்ப்பிணிகள் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
- ஆல்கஹால் மற்றும் காஃபியை தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்தப்படாத சீஸ், பால், மற்றும் பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும்.
- சர்க்கரை / கொழுப்பு / எண்ணெய் / உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
- சரியாக சமைக்கப்படாத உணவுகள், உயர் பாதரச மீன்கள், பச்சை முட்டை மற்றும் பச்சை முளைக்கட்டிய பயிர்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
குழந்தை பிறந்த பிறகும் ஒரு தாய்க்கு சரியான டயட் உணவு அவசியம், ஒரு நல்ல ஊட்டச்சத்து உணவு தாய், சேய் இருவருக்கும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தாயிக்கும் உடல் வேறுபட்டது, எனவே உடலுக்கு ஏதாவது ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அல்லது ஒரு சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் உடனே உங்கள் பெண் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். எக்காரணத்திற்காகவும் அசால்ட்டாக இருந்துவிடக் கூடாது, பின்னர் அது பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.