கர்ப்ப காலத்தில் உள்ளாடைகள் அணியாவிட்டால் என்ன நடக்கும்?
பெண்ணாக பிறந்தாலே தாய்மை அடைய வேண்டும் என்று தான் கூறுவார்கள். தாய்மை அடைந்த பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் தன்னை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்று எண்ணி அதை முறைப்படி செய்துவருவார்கள்.
அதிலும் ஒர சில பெண்களுக்கு தனது உடலை கவனித்துக்கொள்வதில் பல சந்தேகங்கள் இருக்கும்.
அந்தவகையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் உள்ளாடைகளை அணியலாமா எனவும் சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.
இந்த பதிவின் மூலம் அதை பற்றி மேலும் விளக்கமாக தெரிந்துக்கொள்வோம்.
வைத்தியர்களின் கருத்து
பெண்கள் உள்ளாடை அணிவது முக்கியமான ஒரு விடயமாகும். ஆனால் கர்ப்ப காலத்தில் இறுக்கமாக அணிவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதற்கு மாறாக இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தால் பிரசவத்திற்கு பிறகு உடல் ரீதியாக ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆனால் ஒரு சில மருத்துவர்கள் உள்ளாடைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்று கட்டாப்படுத்துவார்கள். அது தவறான விடயம் என்று யாரும் உணர்வதில்லை.
மார்பகங்களில் அணியக்கூடிய உள்ளாடைகளை இறுக்கமாக அணிந்தால் குழந்தைக்கு பால் உற்பத்தி தடுக்க ஒரு காரணியாக அது மாறிவிடும்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பகங்கள் இயல்பு நிலையிலிருந்து விரிவடையும். ஆகவே தளர்வான மற்றும் சௌகரியமான உள்ளாடையை அணிய வேண்டும்.
நீங்கள் பயன்படத்தும் உள்ளாடையை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் உள்ளாடையை அணியவே வேண்டாம் என்று கூறவில்லை. இறுக்கமாக ஆடையை அணிய வேண்டாம் என்று தான் வைத்தியர்களும் பரிந்துரைக்கிறார்கள் என்பது குறிப்படத்தக்கது.