கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: தமிழக அரசின் புதிய அப்டேட்

October 22, 2023 at 1:29 pm
pc

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது.

திமுக அரசு ஆட்சியில் இருக்கும் வரை இந்த பணம் செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் புதிய அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவோரின் வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும்.

மேலும் ஜி.எஸ்.டி., சொத்து வரி, தொழில்வரிகள் உள்ளிட்ட தரவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website