கல் குவாரிக்கு எதிராக குரல்; வேன் ஏற்றி கொடூர கொலை..பகீர் சம்பவம்!

September 11, 2022 at 11:07 am
pc

கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிலை அருகே உள்ள செல்வகுமாருக்கு சொந்தமான தனியார் கல் குவாரிக்கு அருகே ஜெகநாதன்( வயது 52) என்பவருக்கு விவசாய நிலம் அமைந்துள்ளது.

சட்டவிரோதமாக நடத்தப்படும் கல் குவாரி குறித்து பேசி தன்னை செல்வக்குமார் கொலை செய்ய முயற்சிப்பதாக 2019-ம் ஆண்டு ஜெகநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்போது இருந்தே இருவருக்கும் பிரச்சனை இருன்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெகநாதன் செல்வகுமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்வக்குவாருக்கு சொந்தமான அந்த குவாரியை அதிகாரிகள் மூடியுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று க.பரமத்தி அருகே கருடயம்பாளையம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்கு சொந்தமான பொலிரோ சரக்கு வேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த நிலையில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெகநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் மீது க.பரமத்தி காவல் நிலையப் போலீசார் கொலை வழக்குப்பதிவு. தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website