கள்ளக்காதலனை கொலை செய்து உடலை பெரிய சூட்கேசில் அடைத்து எடுத்த சென்ற பெண்-அதிர்ந்த போலீசார்!

August 9, 2022 at 1:01 pm
pc

சேர்ந்து வாழ்ந்த கள்ளக்காதலனை கொலை செய்து உடலை பெரிய சூட்கேசில் அடைத்து எடுத்த சென்ற பெண்.காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்…!

உத்தரபிரதேசம் காசியாபாத் திலா மோர் ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது ஒரு பெண் பெரிய டிராலி சூட்கேசை ஒன்றை இழுக்க முடியாமல் இழுத்து வந்து உள்ளார். போலீசார் அவரை நிறுத்தி விசாரணை நடத்தி உள்ளனர். 

ஆனால் முன்னுக்கு பின்னாக பேசிய அந்த பெண் ஒரு கட்டத்தில் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து அந்த சூட்கேசை திறக்குமாறு கூறினார். 

அந்த சூட்கேசை திறந்த போது சூட்கேசில் ஒரு வாலிபரின் உடல் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் தனது பெயர் பிரீத்தி சார்மா என்றும், காஜியாபாத் துளசி நிகேதனில் வசிக்கும் தீபக் யாதவின் மனைவி.

கடந்த 3 மூன்று வருடங்களாக கணவரை பிரிந்து சம்பால் பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்து உள்ளார். பிரீத்தி பிரோஸை தன்னை திருமண செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் பிரோசுக்கு விருப்பமில்லை. 

ஆனால் பிரீத்தியின் மீது கோபமடைந்த பிரோஸ்: “நீ ஒரு தந்திரமான பெண், நீ உன் கணவருக்கு விசுவாசமாக இருக்கவில்லை, நீ எனக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும்” என்று கூறி உள்ளார். 

இதனால் கோபமடைந்த அந்த பெண், பிரித்து பிரோஸின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார். பின்னார் உடலை மறைக்க பெரிய டிராலி சூட்கேசில் வைத்து மறைவான இடத்திற்கு கொண்டு சென்று போட நினைத்து உள்ளார். ஆனால் போலீசிடம் வசமாக சிக்கி கொண்டார்

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website