கள்ளக்காதலியின் 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற வாலிபர் ….அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தது?
திருவள்ளூர்: சோழவரத்தில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்தவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் மனைவி சுமிதா பார் (21), குழந்தைகளுடன் இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார். இதில் குட்டுலுவுக்கும், சுமிதா பாருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. சுமிதா பார் குழந்தைகளுடன் குட்டுலு வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் குட்டுலு குழந்தைகளை தலையில் தாக்கி, வாயில் டேப்பில் கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். கள்ளக்காதலியையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.