கள்ளக்காதலியை கொன்று தனியார் வங்கி ஊழியர் தற்கொலை!!

July 15, 2022 at 1:21 pm
pc

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொலை செய்த தனியார் வங்கி ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி பொன்மலை, மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் 6 வயதில் மகன் உள்ளார். 

அதே பகுதி பழைய அய்யனார் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (36). இவர் தனியார் வங்கி ஊழியர் ஆவார். வினோத்குமாருக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய கள்ள உறவு இருந்து வந்துள்ளது. எனவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை புவனேஸ்வரியின் வீட்டிற்கு வினோத்குமார் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், புவனேஸ்வரிகழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியாகினார். அங்கிருந்து தப்பி ஓடிய வினோத்குமார், பழைய மஞ்சள் திடல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரெயில் வந்துள்ளது. அப்போது, அவர் திடீரென தண்டவாளத்தில் படுத்துள்ளார். 

இதில் அவரது உடல் துண்டாகி வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பொன்மலை காவல் துறையினர் இரு சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website