கள்ளக்குறிச்சி பள்ளி உரிமையாளர் அறையில் கிடந்த ஆணுறைகள்!

July 19, 2022 at 9:30 am
pc

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் உரிமையாளர் அறையில் ஆணுறைகள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13-ம் திகதி பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தின்போது, பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், ஒரு படுக்கையறைக்குள் ஆணுறைகள் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியின் உரிமையாளர் அறை என கூறப்படும் அறையில் இருந்து தான் ஆணுறைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website