‘கள்ளக்குறிச்சி மாணவி பலாத்காரம்’..? ஜிப்மர் அறிக்கையில் மர்மம் உடையுமா?

August 23, 2022 at 5:45 pm
pc

கள்ளக்குறிச்சி மாணவி பலாத்தகாரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மனுவில் குறிப்பிட்டுள்ளோம் என மாணவியின் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கடந்த ஜூலை 13ம் தேதி 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழங்கி சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஸ்ரீமதியின் உடல் இரண்டு முறை உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டு அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வு அறிக்கை, 2வது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை தங்களுக்கு வழங்குமாறு மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்ரீமதியின் தாய் செல்வி, ”பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் என்ற முறையில் என் மகளுக்கு என்ன நடந்தது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பிரேத பரிசோதனை தொடர்பாக ஜிப்மர் நடத்திய ஆய்வறிக்கையை எங்களுக்கு வழங்கினால் மகளின் மரணம் குறித்த மர்மம் வெளிப்படும். எனது மகள் எப்படி இறந்தார் என்பதை எங்களுக்கும், தமிழக மக்களுக்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும் அதற்கு நீதிமன்றம் எங்களுக்கு உதவ வேண்டும்”.

”ஸ்ரீமதியுடன் படித்த 2 மாணவிகள் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக செய்தி வாயிலாக தெரிந்து கொண்டேன். அந்த மாணவிகள் யார் என்று எனக்கு தெரியப்படுத்த வேண்டும். உண்மையில் அவர்கள் எனது மகளின் தோழிகளா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். ஸ்ரீமதியின் தோழிகள் யார் யார் என்று எனக்கு நன்றாக தெரியும். நீதிமன்றத்தில் அதற்கு அனுமதித்தால் அந்த மாணவிகளின் ரகசியம் காக்கப்படும் என்பதை உறுதியாக சொல்கிறேன்” என செல்வி கூறினார்.

அவரை தொடர்ந்து செல்வியின் வழக்கறிஞர் பேசியபோது, ஸ்ரீமதி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று எங்கள்மனுவில் கூறியுள்ளோம். இன்றுவரை அவரது மரணத்தில் மர்மம் உடையாமல் உள்ளது. ஜிப்மர் மருத்துவ குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பல மர்மங்கள் இருக்கலாம் என நம்புகிறோம். அதை எங்களிடம் வழங்க வேண்டும். அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிந்துகொள்ள விரும்புகிறோம். அதற்காக மனு தாக்கல் செய்துள்ளோம் என அவர் கூறினார். அந்த மனு மீதான தீர்ப்பு இன்று மாலைக்குள் வழங்கப்படவுள்ளது. இதனால் நீதிமன்ற வட்டாரத்துக்குள் பரபரப்பு நிலவி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website