காட்டிற்குள் காதலியுடன் ஒதுங்கிய நபர் – நடந்த சோக சம்பவம்
காட்டிற்குள் தோழியுடன் சென்ற நபர் ஒருவரை புலி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரொல்லி மாவட்டம் தேசாய்கஞ்ச் பகுதியில் வசிப்பவர் அஜித் நாகாடே(21). இவர், கடந்த 3ம் தேதி தோழியுடன் இருசக்கரவாகனத்தில் உசேகாவ் என்ற வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது வழியிலேயே இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு காட்டிற்குள் செல்லுகையில், அங்கிருந்து பயங்கர சத்தத்துடன் புலி ஒன்று புதரில் பதுங்கி இருந்துள்ளது.
பின்னர், அந்த நபர் அஜித் நாகாடே மீது பாய்ந்து, வெறித்தனமாக தாக்கி அவரை காட்டுக்குள் இழுத்து சென்றுள்ளது.
அடித்துக்கொன்ற புலி
உடனே தோழி உடனடியாக தப்பித்து அருகில் உள்ள கிராம மக்களிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனால், பதறிப்போன மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் அஜித் நாகாடேவை தேடியுள்ளனர்.
இருந்தாலும் அவர் கிடைக்காததால், சிறிது சென்ற நிலையில், சடலமாக கிடந்துள்ளார். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது புலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஊர் மக்களை நுழையவும் எச்சரித்துள்ளனர்.