காதலர் முன் நீண்ட நேரம் வாயுவை அடக்கி வைத்ததால் ஏற்பட்ட வினை…மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துயரம்!!
இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு முன் வெட்கப்பட்டு உடல் ரீதியான செயலை அடக்கியதால் அவருக்கு ஏற்பட்டுள்ள விபரீத சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் விக்டோரியா டி ஃபெலிஸ்(21). இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒருவர், 23 மில்லியன் பேர் இவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வருகின்றனர்.
அதை அடக்கிய பெண்
இந்த நிலையில் விக்டோரியா தனது காதலருடன் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவருக்கு உடலில் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வாயு வெளியேற்றத்தால் அவதிப்பட்டுள்ளார்.
தனது காதலன் முன்பு வைத்து ஆசன வாய் வழியே வாயு வெளியேற்ற, விக்டோரியா தயங்கியதால், இதன் காரணமாக, அதனை அடக்கிய படி, நிறைய நேரம் தனது வாயுவை கட்டுப்படுத்தவே, அதுவே அவருக்கு விபரீதம் ஆகவும் அமைந்தது.
மருத்துவமனையில் அனுமதி
அதன், பின்னர் உடல் முழுவதும் வேதனை தொடங்கி, மருத்துவமனை வரை சென்று சேர்த்துள்ளது. ஏற்கனவே வீல் சேர் ஒன்றில் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் இணையத்தில் விக்டோரியா பகிர்ந்திருந்தார். பொதுவாக, ஆசன வாய் வழி வாயு என்பது அனைவரது உடலில் இருந்தும் வெளியேறுவது தான்.
அப்படி வெளியேறுவதை சிலர் சற்று அருவருக்க விஷயமாக கண்டாலும், அதனை வெளியேற்றி அவமானம் கொள்ள வேண்டாம் என கருதும் போது, இது போன்று சில அசம்பாவிதங்கள் கூட நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.