காதலியை பழிவாங்க காதலன் செய்த கொடூரம்!! 7 பேர் பலி …அதிர்ச்சி சம்பவம் !!
காதலி மீதுள்ள ஆத்திரத்தில் காதலன் செய்த செயல் 7 அப்பாவி பொத மக்களை பலி வாங்கி இருக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்ததூரில் நடந்த கட்டடத்தை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய 9 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் உடனடியாக விரைந்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது இளைஞர் ஒருவர் அதிகாலையில் அந்த கட்டிடப் பகுதிக்குள் நுழைந்து பைக்கு ஒன்றுக்கு தீ வைக்கிறார்.
பைக் நிறுத்தும் இடத்தில் ஒரு பைக்குக்கு அவர் தீ வைத்ததால் அந்த தீ அங்கிருந்து அனைத்து வாகனங்களுக்கும் பரவுகிறது.
அதன் பின்னர் கட்டிடமே தீக்கிரையாகிறது. இதை அடுத்து 27 வயதான சஞ்சய் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணை நான் காதலித்து வந்தேன்.
அவளுக்கு அவ்வப்போது பண உதவிகள் செய்து வந்தேன். ஆனால் திடீரென்று அவளுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இது குறித்து அவளுடன் சண்டை போட்டேன். ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாள்.
நான் செலவு செய்த பணத்தையாவது திருப்பிக் கொடு என்று கேட்டேன். அதற்கு அவளும் அவளது தாயும் பணத்தை தர முடியாது என்று சொல்லி என்னிடம் திட்டிவிட்டார்கள்.