காதலியை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம்: காட்டில் ஷ்ரதாவின் மண்டை ஓடு பாகங்கள் மீட்பு
இந்தியாவை உலுக்கிய ஷ்ரதா வாக்கர் கொலை சம்பவத்தில், புதிய திருப்பமாக அவரது மண்டை ஓடு பாகங்கள் காட்டில் கண்டுபிடித்து மீட்கப்பட்டன.
ஷ்ரதா வாக்கரின் மண்டை ஓடு பாகங்கள்
கொலை செய்யப்பட்ட 27 வயது ஷ்ரதா வாக்கரின் மண்டை ஓடு, தாடை மற்றும் பிற எலும்புகளின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை மெஹ்ராலி காட்டில் இருந்து மீட்கப்பட்டதாக டெல்லி பொலிஸ் தெரிவித்துள்ளது.
எச்சங்களை மீட்ட பிறகு, முறையான அறிக்கையைப் பெற தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதாங்கரியில் உள்ள குளம் ஒன்றின் நீர்மட்டம் குறைந்ததையடுத்து, அங்கு பொலிஸார் சோதனை நடத்தியபோது எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விசாரணையில்..
விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் அமீன் பூனாவாலா, ஷ்ரதா வாக்கரை மே 23 அன்று வாக்கரைக் கொன்ற பிறகு, அவரது புகைப்படங்களை எரித்ததாகவும், அவரது அனைத்து ஆதாரங்களையும் அழிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது கிடைத்துள்ள எலும்புகள் ஷ்ரதாவின் எலும்புகள் என்பதை உறுதி செய்ய, டிஎன்ஏ பகுப்பாய்வுக்காக தந்தை மற்றும் அவரது சகோதரரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. காட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவரின் உடல் பாகங்களா என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை 15 நாட்கள் ஆகும்.