காதல் இல்லை, தப்பியோடவில்லை! 4 பள்ளி மாணவிகள் மாயம்.. சிக்கிய கடிதம்

November 3, 2022 at 10:04 pm
pc

எங்கள் நன்மைக்காக செல்கிறோம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான பள்ளி மாணவிகள் 

பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மாணவிகளை தேட தனிப்படை விரைந்தது  

இந்திய மாநிலம் ஆந்திராவில் நான்கு பள்ளி மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் ஒன்றாக காணாமல் போயுள்ளனர். குறித்த 4 மாணவிகளும் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

அதில், ‘எங்கள் நன்மைக்காக நாங்கள் செல்கிறோம். எந்த காதல் வலையிலும் சிக்கவில்லை, தப்பியோடவும் இல்லை. நீங்கள் எப்போதும் எங்கள் எண்ணங்களில் இருப்பீர்கள்’ என தெரிவித்திருந்தனர்.

மேலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே குறித்த மாணவிகளின் எண்ணம் என்றும், ஒரு நல்ல நிலையை அடைந்தவுடன் வீடு திரும்புவோம் எனவும் ஒரு மாணவி கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி விசாரித்துள்ளனர். ஆனால் மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் உடனடியாக புகாரின் பேரில் தனிப்படைகள் அமைத்து மாணவிகளை தேடி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website