காதல் கணவரை பிரிந்தது ஏன்? பிரபல இயக்குநர் கரண் ஜோஹரிடம் சமந்தா சொன்ன காரணம்….

June 22, 2022 at 4:30 pm
pc

கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நாக சைதன்யாவை பிரிந்தது குறித்து பேசியிருக்கிறார் சமந்தா.

சமந்தா

பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சி இந்தி டிவி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டு கரணிடம் பேசியிருக்கிறார். அப்பொழுது நாக சைதன்யாவை பிரிந்தது பற்றி சமந்தா பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விவாகரத்து

காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அது குறித்து எந்த நிகழ்ச்சியிலும் சமந்தா இதுவரை பேசியது இல்லை. இந்நிலையில் முதல்முறையாக காபி வித் கரணில் பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கரண் கேட்டதால் விவாகரத்து குறித்து பதில் அளித்தாராம். ஆனால் விவாகரத்து பற்றி சமந்தா பேசியது டிவியில் வருமா என்பது தெரியவில்லை.

நாக சைதன்யா

பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவும், சமந்தாவும் ஏன் பிரிந்தார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. பிரிவுக்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை. பிரிந்த பிறகு ஒருவரைப் பற்றி மற்றொருவர் தவறாக பேசாமல் அவரவர் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சோபிதா

சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த வதந்தியை கிளப்பிவிட்டதே சமந்தா தான் என்று கூறி அவரை நாக சைதன்யா ரசிகர்கள் விளாசுகிறார்கள். அதை பார்த்த சமந்தாவோ, தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website