காதல் திருமணம் செய்த 9 மாதங்களில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர கணவன்!!

April 11, 2022 at 7:30 pm
pc

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு கணவனும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டிகோரெயான். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெபினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அதன்பின் தம்பதியினர் திண்டுக்கல் YMR பட்டி காளியம்மன் கோயில் அருகே உள்ள மாடிவீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் ஸ்டிகோரெயான் தாயாரும் வந்து தங்கியுள்ளார். இதனிடையே அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் செல் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். மேலும் கணவன்- மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்றும் 11.04.2022 வழக்கம்போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டிகோரெயான் தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்த பயத்தில் தானும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலைய போலீசார், இறந்துபோன ஜெபினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காதல் திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website