காய்ச்சல்,சளி,இருமல்,உடல் வலி,அசதி,தலைவலி மற்றும் தலைபாரம் ஆகியவை உடனே குறைய எளிய மூலிகை சூரணம்…!!

September 9, 2022 at 7:25 am
pc
தேவையான மூலிகைகள்

1.நிலவேம்பு
2.வெட்டிவேர்
3.விலாமிச்சம் வேர்
4.பற்படாகம்
5.பேய்புடல்
6.கோரைக் கிழங்கு
7.சந்தனச்சிறாய்
8.சுக்கு
9.மிளகு


செய்முறை விளக்கம்


மேலே குறிப்பிட்டுள்ள மூல பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கூறிய பெயரில் உள்ள மூலிகைகள் ஒவ்வொன்றிலும் தலா 25 கிராம் அளவு மூலிகைகளாக வாங்கி கொள்ளுங்கள் அதனை வெயிலில் காயவைத்து சுத்தம் செய்து அரைத்து சலித்து வைத்து கொள்ளுங்கள்


பயன்படுத்தும் முறை

250-மி நீரை கொதிக்க வைத்து அதில் 1 பெரிய ஸ்பூன் அளவு அதாவது 10 கிராம் அளவு பொடியை கலந்து சுண்ட காய்ச்சவும் 100 மி ஆனதும் டீ குடிக்கும் பதத்தில் சூடாக குடிக்கவும்


பயன்கள்


இந்த டீ குடிக்க தொடங்கிய 2வது நாளில் இருந்து பலன் தெரியும் காய்ச்சல்,சளி உடனே குறையும் வைரஸ் காய்ச்சல் கூட உடனே போக்கும் பக்கவிளைவுகள் அறவே இருக்காது
இதை பெரியவர்கள் என்றால் 100மி குடிக்கலாம்
15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால் 50மி என உணவுக்கு முன் அல்லது பின் என இரு வேளை குடிக்கலாம்
குறிப்பு : இதில் கசப்பு தன்மை அதிகம் என்பதால் அதே சுவையில் தான் குடிக்க வேண்டும் சர்க்கரை சேர்க்க கூடாது….!!!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website