கார்த்தி -சிவகார்த்திகேயன் படம் மோதல்!!சிக்கலில் தவிக்கும் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா பிரபல நடிகர்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெறுபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வருடம் இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது முதன்முறையாக ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
தமிழ் சினிமா பிரபல நடிகர்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெறுபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வருடம் இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது முதன்முறையாக ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
இதனையடுத்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’ படமும் வசூல் மற்றும் விமர்சனரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தான் தற்போது ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இந்தப்படத்தினை இயக்கி வருகிறார்.இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனிலும், இயக்குனர் விஜய் மில்டனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜுன் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தையும் பக்ரீத் பண்டிகையன்று சோலோ ரிலீசாக வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது அதே தேதியில் கார்த்தியில் ‘ஜப்பான்’ படமும் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்களின் தம்பி – ஹீரோ, சர்தார் – பிரின்ஸ் படங்கள் ஒரே நாளில் ரிலீசானது.
தற்போது மூன்றாவது முறையாக ஒரே நாளில் கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்கள் மோதவுள்ளன. இதனால் மாவீரனை சோலோ ரிலீசாக வெளியிடலாம் என திட்டமிட்ட சிவகார்த்திகேயன் அப்செட் ஆகியுள்ளார். ‘பிரின்ஸ்’ படத்திற்கு பிறகு மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். பிரபல இயக்குனர் மிஷ்கின், அத்தி ஷங்கர், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.